எண்பது வயதான முதியவர் நன்கு படித்த தனது மகனுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.
மகனுக்கு 45 வயதிருக்கும். வெளிநாடு சென்று மேற்படிப்புப் படித்து தற்போது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிக்கிறார். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மாடியில் ஒரு காகம் ‘காகா’ எனக் கரைந்தது.
மகனிடம் கேட்டார் “இது என்ன சத்தம்?”.
“காகம் கரையும் சத்தம்”
சில நிமிடம் கழித்து மீண்டும் அவர் கேட்டார் “இது என்ன சத்தம்?”.
”அப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னேனே - காகம் கரையும் சத்தம் இது”.
மீண்டும் சில நிமிடங்களுக்குப் பிறகு தந்தை கேட்டார் - “இது என்ன சத்தம்?”.
மகன் கத்தியே விட்டார். ”ஏம்பா இப்படிக் கேட்ட கேள்வியையே மறுபடி மறுபடி கேட்டு உசிரை வாங்குறீங்க. இது காக்கை கரையும் சத்தம்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். வயசானாலே உசிரை எடுக்கிறீங்களே”.
மூன்றுமுறை அவர் “இது என்ன சத்தம் என்று கேட்டதற்கே” மகனுக்கு tension தலைக்கேறிவிட்டது.
உடனே வயதில் முதிர்ந்த தந்தை தனது அறைக்குள் சென்று ஒரு பழைய நாட்குறிப்பேடு (diary) ஒன்றைக் கொண்டு வந்தார்.
அவர் பிறந்ததில் இருந்து நடந்த சுவையான சம்பவங்களை அவர் அதில் பதிவெழுதி வந்திருக்கிறார்.
அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து மகனிடம் காண்பித்தார். “மகனே இந்தப் பக்கத்தை சற்று சத்தமாக உரக்கப் படிக்கவும்” - என்றார்.
மகன் படித்துக்கொண்டிருந்தார் :
அந்த நாட்குறிப்பேடில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டு இருந்தது.
“இன்று என் இனிய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஒரு காகம் மாடியின் ஜன்னலின் அருகே அமர்ந்தது. என் பையன் 23 முறை அப்பா அது என்ன? அப்பா அது என்ன? எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். நானும் அவனுக்குப் பொறுமையாக அன்புடன் - அது காகம் - அது காகம் என திரும்பத் திரும்ப அவன் கேள்வி கேட்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவனை அன்புடன் தழுவிக்கொண்டே அவன் ஒவ்வொருமுறையும் அது என்ன என்று கேட்கையில் நான் பதில் சொன்னேன்.
ஒரே கேள்வியை 23 முறை கேட்கிறானே என்று எனக்குத் தோணவில்லை. அவன் மேல் இருந்த அன்பே பெரிதாக இருந்தது.”.
இதைச் சத்தமாகப் படித்த மகனுக்கு பழைய Flash back ஓடியது. தற்போது மூன்றுமுறை தனது தந்தையார் “அது என்ன என்று கேட்டதற்கே - தன்னால் பொறுமையாகப் பதில் சொல்ல இயலவில்லையே. தந்தையின் அன்பு எங்கே தான் எங்கே!” என வெட்கித் தலைகுனிந்தார்.
நீதி : ஊருக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாமல்ல. அனைவருக்கும் ஒரே நியாயம்தான்.
India Time News
காலண்டர்
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- உனக்காக (1)
- ஊஞ்சல்கள் (1)
- காதலிக்க நேரமுண்டு (1)
- காதல் (1)
- காதல் கதை (1)
- காதல் கிறுக்கன் (1)
- கொடுமை (1)
- சிறுகதை -உடைந்த பாத்திரமும் (1)
- சிறுகதை -கருமியின் மனைவி (1)
- சிறுகதை -விலை மகள் (1)
- சிறுகதை-அப்பாவித்தனம் (1)
- சிறுகதை-இது என்ன சத்தம் (1)
- தள்ளாமை (1)
- திருமண உறவு (1)
- தொட்ட இடம் மலரும் (1)
- நீதானடியென்று (1)
- பழைய கவிதைகள் (1)
- பனி மயக்கும் (1)
- பிரிவை விட (1)
- பொய்கள் (1)
0 comments:
Post a Comment