பிரிவை விட
எப்படி
பிரிந்தோம் என்ற
வலிதான் கொடுமையானது ! - ஆம்
மனைவி என்று நீ !
பெறாத அன்னையாய்
உனது தாய் !
மாமா என்று அழையாத -மாமனாக
உனது தந்தை !
தடுக்கி விழுந்தால்
தாங்கக்கூடிய மச்சான்
உனது அண்ணன் !வாரமொருமுறை
விருந்தளித்த குடும்பம் ! -இந்த
உறவுமுறை என்னவாக
இருக்க முடியும் ?....ஆம்
திருமண உறவு .!
இத்தனையும் துளியும்
துயரபடாமல் கிடைத்த அது !
சாட்சியாக தாலி மட்டும் தான் இல்லை !
இத்தனையும் எதுவரை ? இதோ ...
எனக்கு தெரியும்
இறைவனின் போட்டியாளன்
நான் தான் என்று !- விளைவு
காயப்பட்டு கொண்டிருக்கிறேன் !
மொத்தத்தில்
ஆண்டவனுக்கு கூட -என்னை
பிடிக்கவில்லை -இருக்கலாம் ?
அவனை விட - ஒருபடி
சந்தோஷத்தை அனுபவிதிருப்பனோ !?
தீர்வு
ஆண்டவனின் தூதுவனாய்
ஜோஷியர் -ஆம்
இரக்கத்தின் உறைவிடமாய் நானிருக்க
துளியும் இரக்கமில்லாத
உதிர்ந்த வார்த்தை
ஈட்டியாய்
என் நெஞ்சில்!மனப்பொருத்தம்
இல்லையாம் மணமகனாக !
ஆதரிக்க வேண்டிய அவளே
அழவைத்து ரசித்தாள்!
காநீரை குடித்தாள்!
இப்பொது தான்
தெரிந்தது
இரக்கத்தின் பரிசு
இதுவென்று !
தனிமை ...
வலி...
தவிப்பு ...
கண்ணீரின் துணையோடு...
உதிரம் கசிய ...
உயிரற்ற உடம்பாக ...
அலைகிறேன் அனாதையாக ....!?
இப்போது சொல்
பிரிவை விட
எப்படி
பிரிந்தோம் என்ற
வலி
எவ்வளவு கொடுமை என்று .....
India Time News
காலண்டர்
Saturday, April 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- உனக்காக (1)
- ஊஞ்சல்கள் (1)
- காதலிக்க நேரமுண்டு (1)
- காதல் (1)
- காதல் கதை (1)
- காதல் கிறுக்கன் (1)
- கொடுமை (1)
- சிறுகதை -உடைந்த பாத்திரமும் (1)
- சிறுகதை -கருமியின் மனைவி (1)
- சிறுகதை -விலை மகள் (1)
- சிறுகதை-அப்பாவித்தனம் (1)
- சிறுகதை-இது என்ன சத்தம் (1)
- தள்ளாமை (1)
- திருமண உறவு (1)
- தொட்ட இடம் மலரும் (1)
- நீதானடியென்று (1)
- பழைய கவிதைகள் (1)
- பனி மயக்கும் (1)
- பிரிவை விட (1)
- பொய்கள் (1)
0 comments:
Post a Comment